Clean note Policy: ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தம்!

May 19, 2023,07:43 PM IST

டெல்லி : ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு 2023 ம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் பயன்படுத்துவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் எனவும் ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.  




2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பின் போது ரூ.500, 1000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. அதற்கு பிறகு, அதற்கு மாற்றாக ரூ.2000 நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. புதிய 500 ரூபாயும் அறிமுகமானது. 2016 ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. 


ஆனால் சில ஆண்டுகளாக இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது. யாரிடமும் 2000 ரூபாய் நோட்டு இல்லை. வங்கிகளும் அதை விநியோகிப்பதில்லை. இதனால் மக்கள் குழப்பமடைந்தனர். அப்போதுதான் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதையே ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்று தெரிய வந்தது.  இந்த நிலையில் தற்போது அந்த நோட்டை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. க்ளீன் நோட் பாலிசி அடிப்படையில் இந்த 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.




ரூ.2000 நோட்டுக்களை கைகளில் வைத்திருப்போர் தங்களின் வங்கிகளுக்கு சென்று தங்களின் கணக்கில் சேமித்து கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம்.  வங்கிகளின் வழக்கமான வேலைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ.20,000 வரையிலான தொகையை மே 23 ம் தேதி முதல் வங்கியின் வேலை நேரத்தின் போது நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


மார்ச் மாதம் பார்லிமென்ட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த தகவலின் படி, 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை ரூ.9.512 லட்சம் அளவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ரூ.27.057 லட்சம் கோடி ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்