ரூ.2000 நோட்டு திரும்ப பெற இது தான் காரணம்.. ரிசர்வ் வங்கி விளக்கம்

May 20, 2023,09:30 AM IST

டெல்லி :  ரூ. 2000 நோட்டு ஏன் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.

2016 ம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று மாலை அறிவித்தது. தற்போதுள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அதில், இந்திய டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஆண்டு அறிக்கையின் படி யூபிஐ பணபரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. யூபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார், மொபைல், பிரிபெய்டு கார்டுகள் வழியாக 2022 ம் ஆண்டு மட்டும் ரூ.14 .92 லட்சம் கோடி மதிப்பிலான 87.92 பில்லியன் பணபரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதனால் ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது.



clean note policy அடிப்படையில் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு உயர் தரத்திலான ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ரூ.2000 நோட்டுக்கள் 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டவையாகும். அதன் வாழ்நாள் காலமான 4 முதல் 5 ஆண்டுகளை எட்டி விட்டதால் அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளிவிபரத்தின் படி ரூ.6.73 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இவை தற்போது பாதியாக குறைந்து விட்டன. 2023 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளி விபர கணக்கின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே, அதாவது 10.8 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இப்படி புழக்கத்தில் குறையும் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவது ஒன்றும் புதியதல்ல. இதே போல் 2013-2014 லும் திரும்பப் பெறப்பட்டது. 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம், 2005 ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அத்தனை ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது என ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்