கடவுளே காப்பாத்து.. காங்கிரசிற்காக காலையிலேயே கோவிலுக்குப் போன பிரியங்கா!

May 13, 2023,11:12 AM IST
சிம்லா : கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக சிம்லாவில் உள்ள அனுமன் கோவிலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி காலை முதல் பிரார்த்தனை செய்து வருகிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தற்போதே வெற்றியை உறுதி செய்து விட்டார்கள் அக்கட்சியினர். இருந்தாலும் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்க போகிறது என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.



இந்நிலையில் கர்நாடகா மற்றும் நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டிக் கொள்வதற்காக சிம்பாவின் ஜக்கு பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு காலையிலேயே சென்றுள்ளார். பிரியங்கா தியானம் செய்து, வழிபடும் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே காங்கிரஸ் பெரும்பான்மை அளவை விட இடங்களில் முன்னிலையில் இருக்க துவங்கியது. பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்தை விட காங்கிரஸ் மிக அதிகமான சீட்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.  இதனால் காங்கிரசின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் 130 க்கும் அதிகமான இடங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் முழு நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்ததாக மிகப் பெரிய சவால் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. சித்தராமைய்யா, டி.கே.சிவக்குமார் இருவரில் யாரை அக்கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க போகிறது என்பது தான். 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் 10 க்கு இரண்டு கருத்து கணிப்புக்கள் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறி இருந்தன. அதே சமயம் 7 கருத்து கணிப்புக்கள் தொங்கு சட்டசபையே அமையும் என கூறி இருந்தன. கருத்து கணிப்புக்கள் சரியாக இருக்க போகின்றனவா அல்லது பொய்யாக போகின்றனவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்