11 கிலோ கஞ்சாவை எலி சாப்டுருச்சு..  அதிர வைத்த போலீஸ்.. விடுதலையான குற்றவாளிகள்!

Jul 04, 2023,05:01 PM IST
சென்னை: சென்னையில் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து, குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி கஞ்சா வழக்கில் கைதான இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாட்டாங்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, ஆந்திராவைச் சேர்ந்த ராஜகோபால் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். 



இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 22 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்யாமல், சிறிய அளவிலான கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக கூறியதுடன், போலீசாரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தேங்காய் தின்னும் எலியைப் பார்த்திருக்கிறோம்.. மற்ற தின் பண்டங்களைத் தின்பதையும் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கஞ்சாவைத் தின்ற எலிகள் சென்னையில் ஊடுறுவியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கஞ்சாவைத் தின்ற எலிகளுக்கு என்ன ஆனது.. அவை போதையில் என்ன செய்தன.. எங்கே போயின.. உயிருடன் இருக்கின்றனவா அல்லது செத்துப் போய் விட்டனவா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. அப்பாடி ஒரு வழியா நூறைக் கடந்துட்டாங்கய்யா.. கடும் ஏமாற்றத்தைக் கொடுத்த சிஎஸ்கே

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்