11 கிலோ கஞ்சாவை எலி சாப்டுருச்சு..  அதிர வைத்த போலீஸ்.. விடுதலையான குற்றவாளிகள்!

Jul 04, 2023,05:01 PM IST
சென்னை: சென்னையில் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து, குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி கஞ்சா வழக்கில் கைதான இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாட்டாங்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, ஆந்திராவைச் சேர்ந்த ராஜகோபால் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். 



இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 22 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்யாமல், சிறிய அளவிலான கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக கூறியதுடன், போலீசாரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தேங்காய் தின்னும் எலியைப் பார்த்திருக்கிறோம்.. மற்ற தின் பண்டங்களைத் தின்பதையும் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கஞ்சாவைத் தின்ற எலிகள் சென்னையில் ஊடுறுவியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கஞ்சாவைத் தின்ற எலிகளுக்கு என்ன ஆனது.. அவை போதையில் என்ன செய்தன.. எங்கே போயின.. உயிருடன் இருக்கின்றனவா அல்லது செத்துப் போய் விட்டனவா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்