"கதவைத் திற காத்து வரட்டும்".. விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்த பயணி.. ஷாக்!

May 26, 2023,04:24 PM IST
சியோல்: தென் கொரியாவில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது ஒரு பயணி தெரியாமல் கதவைத் திறந்து விட்டதால் 9 பயணிக்கு பலத்த காற்று முகத்தில் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. தென் கொரியாவின் சியோல் நகருக்கு 200 பயணிகளுடன் ஏசியானா ஏர்லைன்ஸைச் சேர்ந்த ஏர்பஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. டேகு சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்த அந்த விமானம் ரன்வேயை நெருங்கிய நிலையில் திடீரென விமானத்தின் அவசர கால கதவு ஒன்றை ஒரு பயணி திறந்து விட்டார். 



இதனால் பலத்த காற்று விமானத்துக்குள் வீசத் தொடங்கியது. விமானம் ரன் வேயை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது கதவு திறக்கப்பட்டதால் காற்று பலமாக வீசியதில் ஜன்னலோரம் இருந்த பயணிகள் திக்குமுக்காடிப் போனார்கள். காற்று முகத்தில் வேகமாக பட்டதால் அவர்களால் மூச்சு விட முடியவில்லை.

ரன்வேயிலிருந்து 650 அடி உயரத்தில் அப்போது விமானம் பறந்து கொண்டிருந்தது.  இருப்பினும் நல்ல வேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமானம் பின்னர் தரையிறங்கியதும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட 9 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து விட்ட பயணியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொட்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் பறக்கும்போது அவசர கால கதவைத் திறந்தால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.  நடு வானில் இதுபோலநடந்திருந்தால் மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு விமானம் கிளம்பவிருந்த நிலையில் அரசியல்வாதி ஒருவர் அவசர கால கதவைத் திறந்தது பெரும் சர்ச்சையானது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்