அதிகரிக்கும் கொரோனா...பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Mar 22, 2023,04:47 PM IST

புதுடில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அது குறித்து ஆலோசனை செய்வதற்காக பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார். 


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. மத்தியசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி நேற்று ஒரே நாளில் 1134 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7026 ஆக அதிகரித்துள்ளது.


இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி சட்டீஸ்கர், டில்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் வீதம் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.




இதனை தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக உயர்மட்டக் குழு உடனான ஆலோசனை கூட்டத்தை பிரதம் மோடி கூட்டி உள்ளார். இன்று மாலை 04.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்