அத்துமீறி வந்தா சுட்டுப்புடுவோம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!

Jul 10, 2023,10:14 AM IST
பியாங்யாங்: வட கொரியாவின் வான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் அத்துமீறி கண்காணிப்பை மேற்கொண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்தள்ளது.

தேவையில்லாமல் தங்களது எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறியதாகவும், இதை உடனே நிறுத்திக் கொள்ளாவிட்டால் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் வட கொரியா கூறியுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தொடர்ந்தால் கடுமையான தாக்குல் தொடுக்கப்படும். அமெரிக்க விமானங்களை சுட்டுத் தள்ளவும் தயங்க மாட்டோம். அப்படி நடந்தால் அது அணு ஆயுதப் பயன்பாட்டில் போய் முடியும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.



இதுகுறித்து வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், அமெரிக்கா தனது கண்காணிப்பு விமானங்களையும், டிரோன்களையும் ஏவி வட கொரியாவை உளவு பார்க்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை மட்டுமல்லாமல், இப்பிராந்தியத்தின் அமைதியையும் சேர்த்தே கெடுக்கும். 

இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் வட கொரியா கட்டுப்பாடு காக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த காலங்களை அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றார் அவர். வட கொரியாவின் இந்த எச்சரிக்கை குறித்து  இதுவரை அமெரிக்கா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்