ரூ.15 க்கு பெட்ரோல் வேண்டுமா ? ....கட்காரி கொடுக்கும் சூப்பர் ஐடியா

Jul 05, 2023,02:10 PM IST

பிரதாப்கர் : இந்தியாவில் ரூ.15 க்க பெட்ரோல் கிடைக்க வேண்டும் என்றால் 60 சதவீதம் எத்தனால் மற்றும் 40 சதவீதம் மின்சாரத்தால் ஆன வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, விவசாயிகளை மனதில் வைத்தே எங்களின் அரசு ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து வருகிறது. விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை கொண்டு 60 சதவீதம் வாகனங்கள் இயக்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.15 க்கு கிடைக்கும் அளவிற்கு விலை குறைந்து விடும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இறக்குமதி அனைத்தும் குறைந்து விடும்.



பெட்ரோல் இறக்குமதிக்காக செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடிகள் விவசாயிகளின் குடும்பங்களுக்கு செல்லும் என்றார். விரைவில் முழுவதுமாக எத்தனாலை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என சமீபத்தில் நாக்பூர் நடந்த கூட்டத்திலும் கட்காரி பேசி உள்ளார். இது தொடர்பாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன தலைவரிடமும் பேசி உள்ளதாகவும், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வது பற்றியும் அவர் பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

100 சதவீதம் எத்தனாலால் இயக்கும் வாகனங்களை பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனால் விலை குறைவு தான். ஒரு லிட்டர் எத்தனால் ரூ.60 தான். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120 க்கு விற்கப்படுகிறது. அதோடு மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் போது எரிபொருக்காக செலவிடப்படும் தொகை குறையும் எனவும் கட்காரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்