நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்.. இனி சோழவந்தானில் நிற்கும்.. மக்களே ஹேப்பிதானே!

Jul 12, 2023,02:56 PM IST
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு முக்கிய ரயில்களும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் கோடிப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், பல முக்கிய நிலையங்களில் நிற்பது இல்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வேத் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பல முக்கிய ரயில்கள் சில முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி சோழவந்தானில் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் ஏற்கனவே இந்த ரயில் சோழவந்தானில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.




சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் இனி  திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி நேரடியாக திருமங்கலத்திலேயே போய் இறங்கிச் செல்லலாம். மதுரையில் இறங்கத் தேவையில்லை.

சென்னை எழும்பூர் - கொல்லம்  இடையிலான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இனி ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை, பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், கூடுதலாக  கீழ்க்கடையம், குண்டாரா ஆகிய  நிலையங்களில் நின்று செல்லும்.  பாலருவி எக்ஸ்பரிஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் கூடுதலாக பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் - பனாரஸ் இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நின்று செல்லும். அதேபோல கோவை - ராமேஸ்வரம்  இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவை தற்காலிக மாற்றம்தான். பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இவை நிரந்தரமாக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்