ராஜினாமா கடிதத்தை எழுதி.. கிழித்துப் போட்ட மணிப்பூர் முதல்வர்!

Jul 01, 2023,10:07 AM IST

இம்பால்: பெரும் கலவரம் மற்றும் வன்முறையில் சிக்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் பாஜக முதல்வர் பைரன் சிங் ராஜினாமா கடிதத்தை எழுதி பின்னர் கிழித்துப் போட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாநிலம் கலவரத்தால் சின்னாபின்னமாகி உள்ளது. இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது மணிப்பூர் பாஜக அரசு. முதல்வர் பைரன் சிங்கின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.



பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன. இந்த நிலையில் பைரன் சிங் ராஜினாமா செய்து கடிதம் தயாரித்து விட்டதாகவும் பின்னர் அதை கிழித்துப் போட்டு விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் உலா வருகிறது. இதை ஒரு மூத்த அமைச்சரே தெரிவித்துள்ளார். மக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து தனது கடிதத்தை கிழித்துப் போட்டு விட்டதாகவும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று இம்பாலில் உள்ள பைரன் சிங் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மனிதச் சங்கிலியை ஏற்படுத்தினர். முதல்வர் பதவி விலகக் கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்துதான் தனது ராஜினாமா முடிவை முதல்வர் பைரன் சிங் ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்