முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்ட ஸ்டாலின்.. சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது!

May 25, 2023,11:20 AM IST
சிங்கப்பூர் : முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்டு விட்டு, அங்குள்ள தமிழ் மக்களுடன் உரையாடி உள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சிஇஓ.,க்களை சந்திக்கும் முதல்வர், 2024 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தார். 



சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தின் மன்னார்குடியில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவிற்கு சிலையும், நினைவு நூலகமும் அமைந்துள்ளது. 

லீ குவான், திராட முன்னேற்ற கழக நிறுவனரான அண்ணாதுரையின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர். அண்ணாத்துரைக்கு அவர் விருந்தும் அளித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் பட்டுக்கோட்டை, பரவக்கோட்டை, திருமக்கோட்டை, மேலதிருப்பால்குடி, கீழ திருப்பால் குடி, நெடுவன்கோட்டை, மேலவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தான் என்றார்.

சிங்கப்பூர்  பயணத்தின் போது லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்ட படி அங்கிருந்த தமிழர்களுடன் கலந்துரையாடினார். ஸ்டாலினின் இந்த செம ஜாலியான சுற்றுப் பயண போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. 

முன்னதாக சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது மதுரைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சண்முகம் கோரிக்கை வைத்தார். அதுகுறித்து மத்தியஅரசுடன் பேசுவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வுடன் ஸ்டாலினின் சிங்கப்பூர் நிகழ்வுகள் முடிவடைந்தன.இன்று வேறு எந்த சந்திப்புக்களும் கிடையாது. மாலை அவர் ஜப்பானின் ஒசாகாவிற்கு புறப்பட உள்ளார்.இன்று இரவு ஒசாகா நகரை சென்றடைய உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்