முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்ட ஸ்டாலின்.. சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது!

May 25, 2023,11:20 AM IST
சிங்கப்பூர் : முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்டு விட்டு, அங்குள்ள தமிழ் மக்களுடன் உரையாடி உள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சிஇஓ.,க்களை சந்திக்கும் முதல்வர், 2024 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தார். 



சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தின் மன்னார்குடியில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவிற்கு சிலையும், நினைவு நூலகமும் அமைந்துள்ளது. 

லீ குவான், திராட முன்னேற்ற கழக நிறுவனரான அண்ணாதுரையின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர். அண்ணாத்துரைக்கு அவர் விருந்தும் அளித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் பட்டுக்கோட்டை, பரவக்கோட்டை, திருமக்கோட்டை, மேலதிருப்பால்குடி, கீழ திருப்பால் குடி, நெடுவன்கோட்டை, மேலவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தான் என்றார்.

சிங்கப்பூர்  பயணத்தின் போது லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்ட படி அங்கிருந்த தமிழர்களுடன் கலந்துரையாடினார். ஸ்டாலினின் இந்த செம ஜாலியான சுற்றுப் பயண போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. 

முன்னதாக சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது மதுரைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சண்முகம் கோரிக்கை வைத்தார். அதுகுறித்து மத்தியஅரசுடன் பேசுவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வுடன் ஸ்டாலினின் சிங்கப்பூர் நிகழ்வுகள் முடிவடைந்தன.இன்று வேறு எந்த சந்திப்புக்களும் கிடையாது. மாலை அவர் ஜப்பானின் ஒசாகாவிற்கு புறப்பட உள்ளார்.இன்று இரவு ஒசாகா நகரை சென்றடைய உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

அதிகம் பார்க்கும் செய்திகள்