சென்னை: நில அபகரிப்பு வழக்கிலிருந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, சைதாப்பேட்டையில் ஒரு நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அவர் வாங்கினார். ஆனால் இந்த நிலம் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக, திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பொன்முடி உள்பட மொத்தம் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில் சார்பதிவாளர் புரு பாபு, பொன்முடி மாமியார் சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ சைதை கிட்டு ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி. ஜெயவேல் இன்று தீர்ப்பை அறிவித்தார். அதில் சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 90 சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது விசாரணைக்குரிய வழக்கே அல்ல என்றும் இதனால் அப்பீல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}