சென்னை : சிவ பெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ருத்ர ரூபமாக விளங்கக் கூடியவர் கால பைரவர். இவர் சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடியவர். இப்போதும் கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகு கோவிலின் சாவியை பைரவரிடம் ஒப்படைக்கும் வழக்கம் உள்ளது.
அந்தகாசுரன் என்ற அசுரன் சிவ பெருமானிடம் இருளை வரமாக பெற்றவன். அந்த இருளைக் கொண்டு, உலகையே இருளில் மூழ்க வைத்து தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரும் துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். அப்போது சிவனிடம் இருந்து ருத்ர மூர்த்தியாக வெளிப்பட்ட பைரவர், அந்தகாசுரனை அழித்து அனைவரையும் காத்தார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு சூப்பர் சம்பளம்.. பாகிஸ்தான் கேப்டனை விட ஜாஸ்தி.. நெட்டிசன்கள் டிரோல்!
கால பைரவர் பல ரூபங்களில், பல பெயர்களில் அருள்பாலிக்கிறார். இவர் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையிலும் சூடியும் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கக் கூடியவர். இவரது வாகனமாக நாய் உள்ளது. இவரே நவகிரகங்களின் பிராணனாக விளங்குபவர்.
பொதுவாக அஷ்டமி நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என்பார்கள். ஆனால் இது வழிபாட்டிற்கு உரிய நாளாகும். அதிலும் தேய்பிறை திதியில் வரும் அஷ்டமி நாள் கால பைரவரை வழிபட மிகவும் ஏற்ற காலமாகும். வில்வ மாலை, தாமரை மாலை, தும்பை மாலை இவற்றை சாத்தி, மல்லிகை தவிர மற்ற வாசனை மலர்களால் பைரவரை வழிபட வேண்டும்.
மிளகு கலந்த வடை மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். மரண பயம், தீவினைகள், நவகிரக தோஷங்கள் நீங்கும். பைரவரை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தலைவிதியையே மாற்றும் சக்தி படைத்தவர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}