ஹிட்லரைப் புகழ்ந்து போஸ்ட் போட்ட இந்தியர்.. கடும் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்டார்!

May 25, 2023,11:56 AM IST
வாஷிங்டன்: ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரைப் புகழ்ந்து லிங்க்இன் சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்ட இந்தியருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே அவர் பகிரங்க மன்னிப்பு கோரி தனது பதிவை நீக்கி விட்டார்.

அந்த நபரின் பெயர் நீரப் மல்ஹோத்ரா. டிலாய்ட் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். இவர் ஹிட்லர் குறித்து ஒரு லிங்க்ட்இன் பதிவைப் போட்டிருந்தார். அதில் ஹிட்லர் மிகவும் வசீகரமானவர், அறிவாளி, காந்தத்தின் ஈர்ப்பு கொண்ட பேச்சாளர் என்றெல்லாம் வர்ணித்திருந்தார். 



மேலும், பல லட்சம்  பெண்கள், குழந்தைகள், ஆண்களை ஹிட்லர் கொன்றிருந்தாலும் கூட அவரது அந்த வசீகரத்துக்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்றெல்லாம் அந்த நபர் எழுதியிருந்தார்.  Friday Inspiration என்ற தலைப்பில் இந்த பதிவைப் போட்டிருந்தார் நீரப் மல்ஹோத்ரா.

இந்தப் பதிவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பலரும் வந்து கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். நீரப் மல்ஹோத்ராவை லிங்க்ட்இன் தளம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.  

இதையடுத்து டிலாய்ட் நிறுவனம் ஒரு விளக்கம் அளித்தது. சம்பந்தப்பட்ட நபர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று அது கூறியிருந்தது. கடந்த மாதம்தான் நீரப் டிலாய்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். 

கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது தனது பதிவை நீரப் நீக்கி விட்டார். அத்தோடு பகிரங்க மன்னிப்பும் அவர் கேட்டுள்ளார்.  யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும். இனிமேல் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார் நீரப் மல்ஹோத்ரா.

"தவறு செய்து விட்டால் தயங்காமல் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புகேட்க வேண்டும் என்று எனது கு���ுநாதர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளனர். எனவே எனது தவறை நான் ஒப்புக் கொள்கிறேன். அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார் நீரப் மல்ஹோத்ரா.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்