தமிழில் இந்தியை திணிக்கவே முடியாது...ஆளுநர் ரவியின் ஓப்பன் டாக்

Apr 13, 2023,11:25 AM IST
சென்னை : தமிழ் மொழியில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மிக பழமையான மொழி என தமிழக ஆளுநர் ரவி, பனாரஸ் பல்கலைக்கழக  மாணவர்களிடம் பேசினார்.

விழாவில் அவர் பேசுகையில், தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழ் மீது திணிக்க முடியாது. தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.



இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் உள்ளது. தமிழ் மொழி இல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நிவைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழை ஆழமாக படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

பனாரஸ் இந்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். அதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்