சென்னையில் மீண்டும் கன மழை.. பலத்த காற்றுடன் அடித்து விளாசியது!

Jun 22, 2023,03:31 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் ஒரு கன மழை வந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன்  மழை வெளுத்தெடுத்தது. இதேபோல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.



புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு  மழை வெளுத்துக் கட்டி சென்னையின் உஷ்ணத்தை உறிஞ்சிப் போட்டுச் சென்றது. இதனால் வெட்கை தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மழை நின்றதைத் தொடர்ந்து மீண்டும் வெயில் தலை காட்டியது.



காலையில் கூட சென்னையில் நன்றாக வெயில் அடித்தது. அடடா மறுபடியும் வெயிலா என்று மக்கள் மண்டை காய ஆரம்பித்த நிலையில் மாலையில் நிலைமை டக்கென தலைகீழாக மாறி மழையைக் கொண்டு வந்து மக்களின் மனதைக் குளிர வைத்து விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்