"செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்".. சில மணி நேரத்திலேயே உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர்!

Jun 30, 2023,08:15 AM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக  அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அந்த உத்தரவை சில மணி நேரங்களிலேயே நிறுத்தி வைத்து விட்டார்.


நாடு முழுவதிலுமிருந்து இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், இது சட்ட ரீதியாக செல்லாது என்ற சட்டக் கருத்துக்கள் எழுந்ததாலும், நாளை திமுக அரசு கோர்ட்டுக்குப் போய் அங்கு ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்துக்குள்ளானால் அது மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதாலும் ஆளுநர் தனது நடவடிக்கையை நிறுத்தி வைத்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தனது உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து கடிதம் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்ட செய்தி வெளியானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




ஆளுநருக்கு  அமைச்சரவையில் ஒருவரை சேர்க்கவோ அல்லது நீக்கவோ சுயமாக அதிகாரம் இல்லாதபோது எப்படி ரவி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இது கோர்ட்டுக்குப் போனால் ஆளுநர் கண்டனத்துக்குள்ளாவார் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன. இதுபோன்ற ஒரு நடவடிக்கை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மிகக் கடுமையாக இதைக் கண்டித்தன.


தேசிய அளவிலும் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன. இதனால் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயர் நேற்று நாடு முழுவதும் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் தனது நிலையிலிருந்து ஆளுநர் பல்டி அடித்துள்ளார். ராத்திரியோடு ராத்திரியாக தனது நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்து முதல்வருக்கும் இதை அறிவித்தார்.


செந்தில் பாலாஜி விவகாரத்தில் மிகவும் அவசரப்பட்டு விட்டார் ஆளுநர் ரவி என்ற எண்ணம் மக்கள் மத்தியிலும் எழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்