கேங்ஸ்டர் தில்லுவை.. 100 முறைக்கு மேல் சரமாரியாக வெட்டிய கும்பல்.. ஷாக் காட்சிகள்!

May 05, 2023,09:16 AM IST
டெல்லி: டெல்லி திஹார் சிறைக்குள் சமீபத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் தில்லு தாஜ்பூரியாவை கொலை செய்த கும்பல், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட முறை வெட்டியும், குத்தியும் வெறியாட்டம் போட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஜிதேந்தர் கோகி என்ற இன்னொரு கேங்ஸ்டர் கும்பலுக்கும், தில்லு தாஜ்பூரியாவுக்கும் ஏற்கனவே பகை உள்ளது. ஜிதேந்தர் கோகியை, கடந்த 2021ம் ஆண்டு டெல்லி ரோஹினி கோர்ட் வளாகத்திற்குள் வைத்து தாஜ் கும்பலைச் சேர்ந்த 2 பேர் வக்கீல்கள் போல உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தில்லு தாஜ்பூரியாவை பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்தனர் கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள்.



தில்லு தாஜ்பூரியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவரைக் கொல்ல ஸ்கெட்ச் போடப்பட்டது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அவரை கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக குத்திக் கொன்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. 6 பேர் சேர்ந்து தில்லு தாஜ்பூரியாவைக் கொலை செய்துள்ளனர். கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் அடித்தும், சரமாரியாக குத்தியும் கொலை செய்துள்ளனர். கழுத்து, முதுகு, தோள்பட்டை, தலை என ஒரு இடம் பாக்கியில்லை. தன்னைக் காத்துக் கொள்ள கடுமையாக முயன்றுள்ளார் தில்லு தாஜ்பூரியா. ஆனால் அந்தக் கும்பல் அவரை விடவில்லை. அவரது அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக வெறித்தனமாக கொன்றுள்ளனர்.

தில்லு தாஜ்பூரியா உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவரை தனியாக ஒரு பகுதியில் அடைத்திருந்தனர். அந்தப் பகுதிக்கு இன்னொரு கட்டடம் வழியாக அந்தக் கும்பல் சுவர் ஏறிக் குதித்து புகுந்துள்ளனர். போர்வைகளை ஏணி போல பயன்படுத்தி அதைக் கொண்டு மேலே ஏறியுள்ளனர். 2 பேர் இப்படி ஏறும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

தில்லு தாஜ்பூரியாவை 100க்கும் மேற்பட்ட முறை கொடூரமாக குத்தியதும் சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. திஹார் சிறைக்குள் நடந்த மிகப் பெரிய  தாக்குதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்