10 வருடமாக.. பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த 51 பேர் .. படம் எடுத்த கணவன்!

Jun 22, 2023,03:28 PM IST

பாரீஸ்: பிரான்சில் தனது மனைவியை கடந்த 10 வருடமாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுத்து ரசித்துள்ளார் ஒரு குரூரமான புருஷன். இந்த விவகாரம் பிரான்ஸை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


மொத்தம் 51 பேர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் எத்தனை முறை பலாத்காரம் செய்தார்கள் என்பதற்கு கணக்கே கிடையாது. கிட்டத்தட்ட தினசரி இந்த அக்கிரமம் நடந்துள்ளது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து இந்த பலாத்காரக் கொடுமையை இந்த கொடூரன் அரங்கேற்றியுள்ளார். இதை முழுக்க முழுக்க அவர் வீடியோ படமும் எடுத்துள்ளார்.


என்ன கொடூரம் என்றால் இத்தனைக் கொடுமையும் அந்தப் பெண்ணுக்கு சமீபம் வரைக்கும் தெரியவே இல்லையாம். கணவர்தான் தன்னுடன் உறவு கொண்டுள்ளதாகவே இந்தப் பெண் நினைத்து வந்துள்ளார். கடந்த 10 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துத் தெரிய வந்ததும் அந்தப் பெண் அதிர்ந்து போய்விட்டாராம். இந்த ஜோடிக்கு திருமணமாகி 50 வருடங்களாகிறது என்பது வேதனையான இன்னொரு விஷயம்.


மொத்தம் 92 பேர் இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதுவரை 51 பலாத்காரக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கைதாகியுள்ளனர். இவர்கள் 26 முதல் 73 வயது வரை கொண்டவர்கள் ஆவர். 


நகராட்சி கவுன்சிலர், லாரி  டிரைவர், தீயணைக்கும் வீரர், ஐடி ஊழியர், வங்கி ஊழியர், சிறைக் காவலர், நர்ஸ், பத்திரிகையாளர் என சகலரும் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்.  இந்தப் பெண்ணின் கணவர் பெயர் டொமினிக்.  தினசரி தனது மனைவிக்கு இரவில் ரோலோஸெபம் என்ற மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து வந்துள்ளார் டொமினிக். அதைச் சாப்பிட்டு அவர் மயங்கிய பிறகு தனது வீட்டுக்கு ஆண்களை வரவழைப்பாராம் இந்த கணவன். அவர்கள் வந்து அப்பெண்ணை நாசம் செய்து விட்டுப் போவார்கள்.


இந்த பாலியல் வக்கிரத்தை வீடியோ எடுத்து அதை தொகுத்து வைத்து வந்���ுள்ளார் அப்பெண்ணின் கணவர். இந்த வீடியோக்களை தொகுத்து "ABUSES" என்ற பெயரில் ஒரு பென் டிரைவில் சேகரித்து வைத்துள்ளார். அதைப் போலீஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.  இதில் பல ஆண்கள் பலமுறை வந்து பாலியல் பலாத்��ாரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 


டொமினிக் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  அவர்கள் டொமினிக்கின் செயலையும், தங்களது தாய்க்கு நேர்ந்த கொடுமையையும் அறிந்து அதிர்ந்து போய் விட்டனர். கணவரின் செயலால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான டொமினிக்கின் மனைவி தற்போது விவாகரத்து செய்து விட்டார். டொமினிக் மீதான விசாரணை தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்