"பயத்தைக் காட்டிட்டாண்டா பரமா".. அதுக்குள்ள 15 வருஷமாச்சா.. நெகிழ்ந்து போன சசிக்குமார்!

Jul 04, 2023,11:15 AM IST
சென்னை: தமிழ் திரைப்பட ரசிகர்களை உறைய வைத்த படங்களில் சுப்பிரமணியபுரம் படத்திற்கும் தனி இடம் உண்டு. அந்தப் படம் வந்து தற்போது 15 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் படத்திற்கு தனி ஸ்பெஷல் உண்டு. ஒரு ரவுடிக் கூட்டத்தின் கதையை வித்தியாசமாக கொடுத்த படம்தான் சுப்பிரமணியபுரம். பல காரணங்களுக்காக இந்தப் படம் வெகுவாக பேசப்பட்டது, பாராட்டப்பட்டது, சிலாகிக்கப்பட்டது.



சாதாரண ரவுடிக்  கதைதான். ஆனால் பாத்திரப் படைப்புகள், அதில் நடித்த கலைஞர்கள், கதைக்களம், கிளைமேக்ஸ் என எல்லாமே அட்டகாசமாக அமைக்கப்பட்டிருந்தன. அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். படத்தில் நடித்த ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, சசிக்குமார், கஞ்சா கருப்பு, குட்டி குட்டி கேரக்டர்களில் வந்தவர்கள் என எல்லோருமே பேசப்பட்டனர், பாராட்டப்பட்டனர்.

சமுத்திரக்கனியை ஒரு நடிகராக  புடம் போட்ட படம் இதுதான். இந்தப் படத்திலிருந்துதான் அவரது கெரியர் கிராப் உயரத் தொடங்கியது. இன்று வேற லெவல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. அதேபோல சசிக்குமாரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பாடல்கள் பேசப்பட்டது.. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

வேலை வெட்டி என்று எதுவும் உருப்படியாக இல்லாத இளைஞர் கூட்டம் தவறானவர்கள் கையில் சிக்கினால் எப்படி சிதறுண்டு சிதிலமடைந்து போகும் என்ற கதையை நாம் ஏற்கனவே கமல்ஹாசனின் சத்யா படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தின் ரவுடிக் கூட்டம் சிதறிப் போக ஒரு காதலும், அந்தக் காதலுக்குப் பின்னால் காத்திருந்த சூழ்ச்சியும் என்ற வித்தியாசமான கோணத்தில் அமைந்த இயக்கமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தப் படம் வந்து தற்போது 15 வருடங்களாகியுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் சசிக்குமார், அதுக்குள்ள 15 வருஷம் ஓடிருச்சா என்று ஆச்சரியப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நேற்றுதான் நடந்தது போல இருக்கு. சுப்ரமணியபுரம் வந்து 15 வருஷமாச்சு. நினைவுகள் அப்படியே இன்னும் பிரஷ்ஷா இருக்கு. மக்கள் எல்லாம் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதோடு நிற்கவில்லை, கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த நல்ல நேரத்தில் ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் - அடுத்த புதிய படத்தை விரைவில் இயக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் சசிக்குமார்.

ரசிகர்களும், திரையுலகப் பிரமுகர்களும் கூட 15 வயது சுப்பிரமணியபுரத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்