ஈரோடு இடைத்தேர்தல்...ஈபிஎஸ் பேசும் போதும் தூக்கத்தில் சொக்கிய வேட்பாளர்...வச்சு செய்யும் நெட்டிசன

Feb 18, 2023,02:54 PM IST
ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அதிமுக வேட்பாளர் தூங்கி வழிந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் ஈபிஎஸ் அணியை சேர்ந்த தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரமும் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. தேர்தல் களத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும், தலைவர்களின் பேச்சுக்களும் டிரெண்டாகி வருகின்றன. இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் திறந்த வாகனத்தில் இருந்தபடியே பேசி வாக்களார்களிடம் ஓட்டு சேகரித்தார். 

திமுக அரசின் செயல்பாடுகள், நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகளை விமர்சித்து காரசாரமாக எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த போது, அவரது அருகில் கை கூப்பியபடி நின்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி வழிந்து கொண்டிருந்தார். தூக்கம் கண்களை சொருகி, லைட்டாக அவர் ஸ்லிப்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

"பிரச்சாரத்தில் தூங்கினால் பரவாயில்லை. சட்டசபையில் போய் தூங்காமல் இருந்தால் சரி". "சட்டசபையிலேயே பலர் இதை தானே செய்து கொண்டிருக்கிறார்கள்". "இரவு முழுவதும் வேலை போல அதுதான் அசந்து விட்டார்." "அவரது வயதிற்கு தூக்கம் வருவது ஒரு விஷயமே இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமா பேசிக்கிட்டு" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நல்ல வேளை இந்த வேட்பாளர் அதிமுகவாக இருந்து விட்டார். தேமுதிகவாக இருந்திருந்தால், விஜயகாந்த்தும் ஆக்டிவான நிலையில் இருந்திருந்தால், அவரது  பிரசாரத்தின்போது இதுபோல தூங்கி விழுந்திருந்தால்.. விஜயகாந்த் எப்படி ரியாக்ட் செய்திருப்பதை நினைத்தாலே கண்ணு வியர்க்குது!

சமீபத்திய செய்திகள்

news

விஜய் கட்சியின்.. விக்கிரவாண்டி மாநாட்டு தேதிக்கு பின்னால இவ்வளவு மேட்டர் இருக்கா?

news

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. ஏற்பாடுகள் பிரமாண்டம்.. பாதுகாப்புக்கு மட்டும் 5,500 போலீஸ்!

news

சென்னை பீச்சில் அடாவடி செய்த.. சந்திரமோகன் தனலட்சுமி.. ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

news

Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்

news

தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு

news

ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!

news

தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

news

சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?

news

பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்