சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இரண்டு நாட்களில் குணமடைந்து, வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா பாதிப்பு அகன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவரது முகநூல் பக்கத்திலும் இளங்கோவன் மருத்துவமனையில் நலமுடன் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}