கருணாநிதியின் பேனா .. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக தொண்டர்.. என்னாச்சு?

Feb 02, 2023,02:39 PM IST
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் திமுக தொண்டர் பிரபாகரன் என்பவரது  இல்லத்தில் 16 அடி உயரம் பேனாவின் சிலை தற்போது பேசுபொருளாக இணையத்தில் வைரலாகி வருகிறது.



தமிழ்நாட்டில் தற்போது "பேனா" பிரச்சனை தான் பெரும் பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதியை போற்றும் வகையில் மெரீனா கடலுக்கு நடுவில் பேனா சின்னம் அமைக்கப்படும் என அறிவித்தார். 

கடலுக்கு நடுவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 36 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் சுமார் 42 மீ உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேனா சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் மக்களின் கருத்துக்களை கேட்டு குற்றுசூழல் அனுமதி பெற்று அடுத்தகட்ட பணியை தொடங்க வேண்டும் என மத்திய சுற்றுசூழல் துறை ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் கடத்த ஜனவரி 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பங்குபெற்றார்.

பெரும் கூச்சல் குழப்பத்துடனும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பேனா சின்னத்தை கடலுக்குள் வைக்க எதிர்க்கிறேன், அப்படியே கடலுக்குள் பேனா சின்னத்தை வைத்தால் உடைப்பேன் என காட்டமாக பேசினார். சீமானின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனா சின்னத்திற்கு சிலர் ஆதரவு கொடுப்பதும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திமுக தொண்டர் ஒருவர் பேனா சின்னம் பிரச்சனைக்கு சூப்பராக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆதம்பாக்கத்தில் உள்ள திமுக பிரமுகர் பிரபாகரன் என்பவர் தனது வீட்டின் முன்பக்க சுவற்றில் சுமார் 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனா சிலையை வைத்துள்ளார். மேலும் இந்த பேனாவின் கீழ்ப்பகுதியில் கருணாநிதியின் புகைப்படத்துடன் ஒரு வசனமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதில், "தலைவரே உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை" என எழுதப்பட்டிருக்கிறது.

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. பிரபாகரனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நெட்டிசன்கள் பலர் "இது நல்ல ஐடியாவா இருக்கே .." "கோடிகளில் செலவு பண்ணாம இப்படி செய்யுங்கப்பா" என கமெண்ட் செய்தும் வருகின்றனர். இந்த பேனா சிலை வீடு வீடாக பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதால் பிரபாகரன் முன்னோடியாக மாறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்