"கடைசில மண்டை ஓடு கூட மிஞ்சாது".. செல்வராகவன் ரொம்ப டென்ஷனா இருக்காரே

May 25, 2023,02:34 PM IST
சென்னை: அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.  கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.. அதாவது சினிமாக்களில் சின்னச் சின்னதாக  முக்கியமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இயக்குநராக ஜொலித்த காலத்தைப் போலவே இப்போது அவர் நடிகராகவும் அசத்திக் கொண்டிருக்கிறார்.



பீஸ்ட் படத்தில் ஹீரோ விஜய் கேரக்டருக்கு நிகராக இவரதது கேரக்டரும் ரொம்பவே பேசப்பட்டது. அதேபோல இவரை ஹீரோவாக வைத்து பகாசுரன் படமும் வெளியானது. இந்த நிலையில் அடுத்தடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் இப்போது சமூக வலைதளமான டிவிட்டரில் தொடர்ந்து வித்தியாசமான தத்துவங்களைச் சொல்லி ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.

சமீபத்தில், "உங்கள் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள். அதனால் எதையும் உண்மை என்று நம்பி விடாதீர்கள்" என்று தத்துவம் சொல்லியிருந்தார்.

இல்லாத மரியாதையை தேடாதீர்கள் என்று சமீபத்தில் ஒரு வரியில் உண்மையை உரசி விட்டுச் சென்றிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.  அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை. என்று தன்னம்பிக்கை ஊட்டியிருந்தார்.

அதேபோல, அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது ! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை  என்று லவ் சிம்பல் போட்டிருந்தார். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமியும் வந்து உடனே பதில் போட்டார்.. அவர் கூறுகையில், காதலை மனம் திறந்து சொன்னால் ஒரு காதல் பரிசாக உண்டு. அதற்கு வாழ்த்துகிறேன். இக்கருத்தை சிலாகித்தேன்
செல்வா சார் என்று பாராட்டியிருந்தார்.

இப்படி மணி சாருக்கு அடுத்தபடியாக செல்வா சார் கருத்துக்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இன்று இன்னொரு வித்தியாசமான கருத்தைப் போட்டுள்ளார் செல்வராகவன். அதுதான் இது... "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.  கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்"

உண்மைதானே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்