புதுடில்லி : 2016 ம் ஆண்டு நவம்பர் 08ம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு செல்லாது என அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு பேர், "மத்திய அரசு பணமதிப்பு செய்தது செல்லும். இந்த முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டது கிடையாது. அதற்கு முன் 6 மாதங்களாக ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளது" என மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
அதே சமயம், ஒரே ஒரு நீதிபதி மட்டும் மத்திய அரசின் இந்த முடிவு சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார். மேலும், பழைய செல்லாதரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள 52 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி பி.ஆர்.கவாய் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து 58 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த கடுமையான முடிவில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டாகவும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}