சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

Jun 20, 2023,12:38 PM IST
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதுடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நீர்மட்டம் நெருங்கி உள்ளது. 



மழை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி ஓரிரு நாட்களில் தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரம் கலெக்டர் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உபரிநீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

மழை தொடர்ந்து, ஏரியின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்தால் எந்த நேரத்திலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மற்ற ஏரிகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து 3 தோல்வி.. இன்று இரண்டாவது வெற்றியை ஈட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

பங்குனி உத்திரம்.. பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பிகே சேகர்பாபு

news

வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!

news

வங்கக்கடலில் உருவான..காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.. இந்திய வானிலை மையம்!

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

எரிபொருளின் கலால் வரி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு கண்டனத்திற்குரியது.. நாதக சீமான்!

news

இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி.. எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்