சென்னை : சென்னை ரெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச டிக்கெட் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில பயணிகளை தேர்வு செய்த அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை மெட்ரோவில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 7 லட்சமாக இருந்தது, தற்போது 2.5 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோ பயணாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள ஏதாவது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களில் பணி புரிவோர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து இந்த இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த பயனாளர்களை அவர்களின் மார்க்கெட்டிங் டீம் தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வுகள் முடிப்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாள் வரை இலவச டிக்கெட்டாக வழங்கப்படும். பிறகு சலுகை விலையில் இந்த டிக்கெட் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நிரந்தரமாக மெட்ரோவில் அவர்களை பயணம் செய்ய ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்களை மற்றவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாது. இந்த டிக்கெட் பயணம் செய்பவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இலவச டிக்கெட் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}