கலைஞர் பேனா நினைவு சின்னம்.. மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

Jun 22, 2023,04:49 PM IST

டெல்லி : சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.   


தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவுகூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் 134 அடி உயரத்தில்ண பேனா வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார்.


பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக பொது நல வழக்குகள் பலவும் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் படி மத்திய அரசிற்கு, தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இன்று அனுமதி அளித்துள்ளது. 


கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. குமரி அனந்தன் காலமானார்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்