ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது லஞ்ச வழக்கு

May 13, 2023,10:14 AM IST
டில்லி : போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் ஆர்யான் கானை சேர்க்காமல் இருப்பதற்காக சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணை துவங்கப்பட்டு, மும்பை, டில்லி, ராஞ்சி, கான்பூர் ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைமை அதிகாரியாக உள்ளார் வான்கடே. இவர் தலைமையிலான படையினர் 2021 ம் ஆண்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அங்கு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானும் இருந்தார். அவரை போதை வழக்கில் அதிகாரிகள் செய்தனர்.



இந்த வழக்கில் நான்கு வாரங்கள் வரை ஆர்யான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 2022 ம் ஆண்டு மே மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய ஆர்யான் மீதான அனைத்து போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டன. முன்னதாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, வான்கடே தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் பல தவறுகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 

அதோடு கடந்த ஆண்டு மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வரித்துறை இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார் வான்கடே. தற்போது அவர் மீது லஞ்ச கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்