பக்ரீத் 2023 : தியாகத்தை போற்றும் ஈகை திருநாள்

Jun 29, 2023,09:18 AM IST
சென்னை : இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. ஈத் அல் அதா, ஈத் உல் அதா, ஈகை திருநாள், குர்பானி பெருநாள் என பல பெயர்களில் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

இறை தூதர் இப்ராஹீம், இறைவனிடம் பல காலமாக ஆண் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தார். இறைவனின் கருணையால் இஸ்மாயீல் என்ற மகன் பிறந்தான். சில காலங்களில் அந்த மகனை இறைவனுக்கு பலியிட வேண்டும் என இறை உத்தரவு வந்தது. இறைவனின் உத்தரவை நிறைவேற்ற தனது மகனை பலி கொடுக்க தயாரானார் இப்ராஹீம். அந்த சமயம் மகனுக்கு பதில் பிராணி ஒன்றை பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டார். 



இறைவனின் உத்தரவை நிறைவேற்ற தனது மகனை பலியிட தயாராக இறை தூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரெண்டாவது மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் பிறை தெரிவது உலகின் பல பகுதிகளில் மாறுபடுவதால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் தேதியும் மாறுகிறது.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையானது சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஜூன் 28 ம் தேதியும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் ஜூன் 29 ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புக்களையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்வார்கள். பக்ரீத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகைகளும் நடத்தப்படுகின்றன.

இஸ்லாமிய கோட்பாடுகளின் படி, பக்ரீத் நாளில் கண்டிப்பாக குர்பானி அளிக்க வேண்டும். குர்பானியில் பலியிடப்படும் பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதிகளாக பங்கிட வேண்டும். இதில் ஒரு பகுதி குடும்பத்தினருக்கும், 2வது பகுதி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், 3வது பகுதி ஏழைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

news

முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்