பிரிக்ஸ் மாநாடு : இந்திய-சீன எல்லை பிரச்சனைக்கு முடிவு கிடைக்குமா?

Aug 22, 2023,12:35 PM IST
 ஜோகனஸ்பெர்க் : தென்னாப்பிரிக்காவில் இன்று பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா பிரதமர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளதால் இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் பிரிக்ஸ் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) துவங்குகிறது. இதில் பிரேசில், சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 2019 ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் மாநாடு இதுவாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு நடத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் உலக தலைவர்களின் சந்திப்பு என்பதால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் சீன பிரதம் ஷின் ஜின்பிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இதனால் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா- சீனா பிரதமர்கள் சந்திப்பு ஏற்படலாம், அப்போது எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்கள் சந்திப்பு இதுவரை முடிவாகவில்லை என தெரிகிறது.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் காலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, உலக தலைவர்களை சந்தித்து, பயனுள்ள விஷயங்களை பகிர்வதற்கு இது நல்ல வாய்ப்பு. ஆக்கப்பூர்வ விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதால், எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்