டக்குன்னு கையைத் தூக்கிய நியூஸ் ரீடர்.. அடுத்து நடந்த காமெடி.!

May 06, 2023,10:32 AM IST
லண்டன்: பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவர் லைவ் நியூஸ் வாசிப்பின்போது திடீரென கையை மேலே தூக்கிய செயல் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவியில் செய்தி வாசிப்போருக்கு இதுபோன்ற காமெடியான அனுபவங்கள் நிறையவே இருக்கும். முன்பு தூர்தர்ஷன் செய்தி வாசிப்பின்போது அப்போதைய பிரபல நியூஸ் ரீடர் ஷோபனா ரவி பலமுறை இதுபோன்ற சம்பவங்களை சந்தித்துள்ளார். வாசித்துக் கொண்டே இருப்பார். டெலி பிராம்ப்டர் சரியாக ஓடாது.. இதனால் அவரது செய்தி வாசிப்பு தடங்கலாகும்.. அப்படியே கொஞ்சம் முறைத்து விட்டு தாளைப் பார்த்து படிக்க ஆரம்பிப்பார். அடிக்கடி இப்படி நடக்கும்.



இந்த நிலையில் பிபிசி செய்தி வாசிப்பாளர் லூக்வெசா புராக் என்ற பெண் நியூஸ் ரீடருக்கு ஒரு சங்கடமான அனுபவம் நடந்துள்ளது. கலகலப்பான  சில நொடி தவறு இப்போது வைரலாகி விட்டது. அவர் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கிளிப்பிங் காட்டப்பட்டது . சில விநாடிகளே ஓடிய அந்த கிளிப்பிங் முடிந்ததும் சட்டென்று கேமரா லூக்வெசாவை நோக்கி திரும்பியது. ஆனால் அவரோ  தனது கைகளை உயர்த்தி  நெட்டி முறித்துக் கொண்டிருந்தார். 

தன் பக்கம் திடீரென கேமராதிரும்பியதை எதிர்பாராத அவர் டக்கென்று கைகளை கீழே இறக்கி விட்டு விட்டு அமைதியில் உறைந்தார். சில  விநாடிகள் அவர்செய்தியே வாசிக்கவில்லை. ஸ்தம்பித்துப் போனது போல  அமர்ந்திருந்தார். அதன் பின்னர் மெளனம் கலைந்து செய்தியை வாசிக்கத் தொடங்கினார். இந்த சில விநாடி கலகலப்பு இப்போது வைரலாகி விட்டது. இந்த சம்பவம் குறித்து லூக்வெசா ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அந்த டிவீட்டில்,  தேங்க்யூ நண்பர்களே, உடன் பணி புரிவோரே, அத்தனை பேரும் வீடியோவைப் பார்த்து மகிழந்துள்ளர்கள்.. நன்றி என்று கூறியுள்ளார் லூக்வெசா. நெட்டிசன்கள் பலரும் லூக்வெசாவின் கிண்டலடிக்காத வகையில் கலாய்த்துள்ளனர். பலர் ஜாலியான கமெண்ட் போட்டுள்ளனர். அவற்றுக்கும் பதில் கொடுத்துள்ளார் லூக்வெசா. அதேசமயம் தனது தவறை லூக்வெசா சாதுரியமாக சமாளித்ததை பலரும் பாராட்டியுள்ளனர்.

ஏன்டா கையைத் தூக்குனது ஒரு குத்தமாடா?? (அப்படின்னு லூக்வெசாவின் மைன்ட் வாய்ஸ் பேசியிருக்கும்)

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்