"மோடிதான் பாஸ்".. ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்..  சிட்னியைக் கலக்கிய நரேந்திர மோடி!

May 23, 2023,03:14 PM IST

சிட்னி:  சிட்னியில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், பிரதமர் நரேந்திர மோடியை பாஸ் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

சிட்னி சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அங்கு நடைபெற்ற இந்தியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். அங்குள்ளகுடோஸ் பாங்க் ஏரினா அரங்கில் 20,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த கூட்டத்தில் மோடி பேசினார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸும் கலந்து கொண்டார்.



தொடக்க உரையாற்றிய ஆல்பனீஸ் கூறுகையில், இதே அரங்கில்  கடைசியாக ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அவரை எல்லோரும் பாஸ் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் அவருக்குக் கூட இப்படி ஒரு கூட்டம் கூடவில்லை. அப்போது கூடியதை விட இப்போது மிகப் பெரிய உற்சாகத்துடன் நீங்கள் கூடியுள்ளீர்கள். மோடிதான் இங்கு பாஸ்! என்றார் ஆல்பனீஸ்.

முன்னதாக மோடியும், ஆல்பனீஸும் கூட்ட அரங்குக்கு வந்தபோது இந்தியர்கள் பெரும் உற்சாகத்துடன் இருவரையும் வரவேற்றனர். இந்திய கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  பாரம்பரியமான முறையில் இரு பிரதமர்களும் வரவேற்கப்பட்டனர்.

முன்னதாக இரு பிரதமர்களும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஆல்பனீஸ் கூறுகையில், நான் பிரதமராக பதவியேற்ற பின்னர் நாம் 6வது முறையாக சந்திக்கிறோம். இது நமது நாடுகள் குறித்த உறவில் நாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்தியா உலகின் 3வது பெரும் பொருளாதார வல்லரசாக உயரும். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏற்கனவே இந்தியா திகழ்கிறது.  இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான நாடு இந்தியா. இந்தியாவுடன் உறவை வலுப்படுத்திக் கொள்வதில் ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது என்றார் ஆல்பனீஸ்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்