உடைந்தது தேசியவாத காங்கிரஸ்.. சரத் பவார் தம்பி அஜீத்.. துணை முதல்வராக பதவியேற்பு!

Jul 02, 2023,02:58 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைந்தது போல தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது. பாஜக அரசுடன் சரத் பவாரின் தம்பி அஜீத் பவார் கை கோர்த்து துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

பாஜக முகாமுக்கு அஜீத் பவார் தாவுவது இது முதல் முறையல்ல. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆட்சியமைக்க தயாரானபோது கட்சியை உடைக்க முயன்று பாஜக பக்கம் போனவர்தான் அஜீத் பவார். ஆனால் போன வேகத்திலேயே மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கே திரும்பி வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜக பக்கம் தாவியுள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சரத் பவாரின் மகள் சுப்ரியூ சூலேவும், பிரபுல் படேலும் நியமிக்கப்பட்டார்கள். அஜீத் பவாருக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. இதனால் அவர் ஆத்திரமடைந்தார். ஆனாலும் அமைதி காத்து வந்தார்.



இந்த நிலையில்தான் இன்று திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசில் இணைந்துள்ளார் அஜீத் பவார். துணை முதல்வராக அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 20க்கும் மேற்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதன் மூலம் மகாராஷ்டிராவில் 2வது முறையாக ஒரு பெரிய கட்சி உடைந்துள்ளது. முதலில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே மூலம் சிலரை வெளியே இழுத்து அவரை முதல்வராக்கியது பாஜக. தற்போது தேசியவாத காங்கிரஸை உடைத்து அஜீத் பவாரை துணை முதல்வராக்கியுள்ளது.

இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக சரத் பவார் தீவிரமாக பணியாற்றுவதில்லை. அதானியைக் கூட புகழ்ந்துதான் பேசி வருகிறார். அப்படி இருந்தும் அவரது கட்சி உடைக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பவாரின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்