கங்கர், சட்டீஸ்கர்: அடடா... எவ்வவளவு சந்தோஷம் பாருங்க இந்த தாத்தா முகத்தில்.. தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாக சட்டசபை தேர்தலில் வாக்களித்து தனது உரிமையை நிலை நாட்ட போகிறார் இந்த 9 3 வயது தாத்தா.
சட்டீஸ்கர் மாநிலம் பைன்ஸ்கன்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் ஷெர்சிங் ஹெட்கோ. இந்த 93 வயதுடைய தாத்தா நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ள கன்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இது பானு பிரதாப்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமம் .
இதுவரை இவர் தேர்தலில் வாக்களித்ததே கிடையாதாம். இந்நிலையில் தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக வருகிற சட்டசபை தேர்தலில் வாக்களிக்க உள்ளாராம். 2024ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக தற்போது வாக்காளர்களின் பெயர்களை சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
வீடு வீடாக போய் விடுபட்ட வாக்காளர்களின் பெயரை சேர்க்கும் பணி இடம்பெற்று வருகிறது. ஷெர்சிங் ஹெட்கோ கிராமத்திலும் வாக்காளர்களின் பெயர்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போதுதான் இவரது பெயர் பட்டியலில் இடம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலாக இணைக்கப்பட்டது.
தனக்கு ஓட்டு போடும் உரிமை கிடைத்திருப்பதே இந்த தாத்தாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம் . இத்தனை காலமாக இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறமாலே இருந்து வந்தது. இந்த காரணத்தினால் தான் இவர் எந்த தேர்தலிலும் ஓட்டு போட்டதே இல்லையாம் .
தனது வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஓட்டு போடவிருப்பதால் பெரும் பரவசத்துடன் இருக்கிறாராம் தாத்தா. சூப்பர்ல!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}