ஓடி வரும் காவிரி.. கர்நாடக ஆறுகளில் 85,000 கன அடி நீர் திறப்பு.. தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்ச்சி!

Jul 21, 2024,05:10 PM IST

பெங்களூரு:  கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணை நிரம்பப் போகிறது. இதனால் கர்நாடக காவிரி ஆறுகளில் விநாடிக்கு 85,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.


கேரளா மற்றும் கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முதலில் கபிணி அணை நிரம்பியது. பிறகு நுகு அணை நிரம்பியது. தற்போது கே.ஆர்.எஸ். அணையும் விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. 




ஒட்டுமொத்தமாக தற்போது விநாடிக்கு 85,000 கன அடி நீர் வரை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 50,000 கன அடி நீருக்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோல கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் விரைவில் நீர் திறப்பு விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கேஆர்எஸ் அணைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கர்நாடகத்திலிருந்து  காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது விநாடிக்கு 71,777 கன அடி என்ற அளவில் நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.91 அடியாக உள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். கடந்த சில நாட்களாக தினசரி 8 முதல் 10 அடி வரை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விரைவில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்