டெல்லி: 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. இதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ல் தொடங்கி, மார்ச் 27ல் முடிவடையும். இந்த மனுக்கள் மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும்.
இந்தத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பல்வேறு வசதிகள். அதன்படி, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பினால், வீட்டிலிருந்து வாக்களிக்கலாம். இவர்களுக்காக வாக்குச் சீட்டுகள் வீட்டுக்கே கொண்டு வந்து இவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}