பெற்றோர்களே உஷார்.. செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி.. கேரளாவில் பயங்கரம்!

Apr 25, 2023,01:16 PM IST
திருச்சூர் : கேரளாவில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த திருவில்வமலா பகுதியை சேர்ந்தவர் ஆதித்யஸ்ரீ. இவர் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மொபைல் போன் வெடித்து சிதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



ஆதித்யஸ்ரீ, திருவில்வமலா பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ,நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போ���ு இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 

முகத்துக்கு அருகில் வைத்துக் கொண்டு விளையாடியுள்ளார் இந்த சிறுமி. அவரது முகம், கைகள் கடும் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விசாரைணக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உயிரை மொபைல் போன் குடித்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்