டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி கட்ட தேர்தல் ஜுன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்ட தேர்தல் நிறைவடைந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்ட பலர் இறுதி கட்ட பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 889 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் எவ்வித தடையும் இன்றி அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கவும் தகுந்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!