2018 முதல் இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மரணம்.. மத்திய அரசு தகவல்

Dec 08, 2023,06:17 PM IST

டெல்லி: கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 403 பேர் வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதில் இதை தெரிவித்துள்ளது.


மத்திய அமைச்சர் வி.முரளீதரன் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இயற்கை மரணங்கள், விபத்து, கொலை என்று பல்வேறு காரணங்களினால் இந்த மாணவர்கள் மரணத்தை சந்தித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவிலான மாணவர்கள் இறந்தது கனடாவில்தான். கனடாவில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிாலந்தில் 48, ரஷ்யா 40, அமெரிக்கா 36, ஆஸ்திரேலியா 35, உக்ரைன் 21, ஜெர்மனி 20, சைப்ரஸ் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 10 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர்.




இந்திய மாணவர்களின் நலன் குறித்து மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க அனைத்துத் தரப்பினருடன் இணைந்து செயல்பட மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. இந்திய தூதரக அதிகாரிகள், தத்தமது நாடுகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு படிக்கும் இந்திய மாணவர்களைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இந்திய மாணவர்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் உடனடியாக தூதரக அதிகாரிகள் அதுகுறித்து முன்னுரிமை கொடுத்து ஆவண செய்கிறார்கள். அவசர கால மருத்துவ உதவி, நாடு திரும்ப உதவுவது, வெளிநாட்டுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் தங்குமிடத்தை தேர்வு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் உதவுவது ஆகிய பணிகளையும் இந்தியத் தூதரகம் செய்கிறது என்றார் அமைச்சர் முரளீதரன்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்