இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இந்து கோவில்கள் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 இந்துக்களை சிறைபிடித்து வைத்திருந்ததை பாகிஸ்தான் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் "ஷீமா ஹைதரின் காதல் விவகாரம்" தான்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான ஷீமா ஹைதர் என்பவர், நான்கு குழந்தைகளுக்கு தாய். இவருக்கு இந்தியாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது இளைஞர் மீது காதல் ஏற்பட்டது. இதனால் தனது குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு இந்தியா வந்த ஷீமா ஹைதர், நொய்டாவில் தனியாக வீடு எடுத்து தனது காதலருடன் வசிக்க துவங்கினார்.
ஆனால் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்ததாக ஷீமா கைது செய்யப்பட்டார். இருந்தாலும் காதலனை விட்டு பிரிந்து செல்ல மறுத்த ஷீமா, தனக்கு இந்திய குடியுரிமை அளிக்க கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவில்கள் பலவும் தாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் கராச்சி மற்றும் சிந்து பகுதியில் உள்ள இரண்டு இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் சிந்து பகுதியில் தான் 30 இந்துக்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்திருப்பது தெரிய வந்தது. விவரம் அறிந்து போலீசாரும், மனித உரிமைகள் கழகத்தினரும் அங்கு சென்ற போது, ஆயுதம் ஏந்திய அந்த கும்பல் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}