பெங்களூரு: கர்நாடக பாஜக எம்.பி.மகன் மீது 24 வயது பெண் திருமண மோசடி புகார் செய்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மைசூர் ஹோட்டலில் ரூம் போட்டு, தன்னுடன் உறவு கொண்டு விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் ஒய். தேவேந்திரப்பா. இவர் பாஜக எம்.பி. ஆவா். இவரது மகன்தான் ரங்கநாத். 42 வயதான ரங்கநாத், கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இவர் மீது 24 வயது பெண் பாலியல் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகாரில், தான் கல்லூரி பேராசிரியராக பணிபுரிவதாக கூறி தன்னுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார் ரங்கநாத். இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் தான் ரங்கநாத் எனக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் நெருங்கிப் பழகினோம். இது காதலானது. உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் கூறியதால் நானும் நம்பினேன், எனது பெற்றோரையும் அவர் நம்ப வைத்து விட்டார்.
இந்த நிலையில் மைசூருக்கு ஒரு முறை போனபோது அங்கு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அப்போது குடிபோதையில் இருந்த ரங்கநாத் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு என்னை தவிர்க்க ஆரம்பித்தார். கேட்டதற்கு வயது வித்தியாசம் இருக்கிறது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இதுகுறித்து எம்.பி. தேவேந்திரப்பாவிடம் புகார் கூறியும் பலன் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், போலீஸார் தற்போது ரங்கநாத் மீது ஐபிசி 417, 420, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}