மகாராஷ்டிரா மருத்துவமனையில் 24 பேர் மரணம்.. பிரியங்கா காந்தி வேதனை

Oct 03, 2023,10:54 AM IST

டெல்லி:  மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில்  உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் இறந்துள்ள சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.


நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.  இந்த சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.




இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  இந்த இரட்டை என்ஜின் அரசு நிர்வாகத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பரிதாபமாக 24 பேரின் உயிர் பறி போயுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என்பது வேதனை தருகிறது.


தவறு இழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும். இதுகுறித்துப் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்