விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகிலேயே மிகப்பெரிய, 206 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை இன்று திறக்கப்படுகிறது.
81 அடி உயரத்தில் பீடமும், அதற்கு மேல் 125 அடி உயரத்தில் சிலையும் என மொத்தம் 206 அடியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 18.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.404.35 கோடி செலவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மத சார்பற்ற சிலையாக இந்த சிலை வர்ணிக்கப்படுகிறது.
சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு "ஸ்மிருதி வனம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. சிலை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி வனம் முழுவதும் சுற்றுலா தளமாக மாற்றப்டுகிறது. அதற்கேற்றார் போல அந்த இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வாக்கிங் போவதற்கும் அந்த வளாகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிலைக்கு கீழே பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாட்டு இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் சிலை அமைந்துள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிலையைத் திறந்து வைக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை அனைத்து துறைகளிலும் மாற்றி அமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கரின் உணர்வை உலக முழுவதும் பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!
ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்
விஜய் கட்சியின்.. விக்கிரவாண்டி மாநாட்டு தேதிக்கு பின்னால இவ்வளவு மேட்டர் இருக்கா?
தமிழக வெற்றிக் கழக மாநாடு.. ஏற்பாடுகள் பிரமாண்டம்.. பாதுகாப்புக்கு மட்டும் 5,500 போலீஸ்!
சென்னை பீச்சில் அடாவடி செய்த.. சந்திரமோகன் தனலட்சுமி.. ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!
Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்
தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு
ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!
தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!
{{comments.comment}}