தயிரை எடுத்து 2 பெண்களின் தலையில் ஊற்றிய ஆசாமி.. போலீஸ் அடுத்து செய்த காரியம்!

Apr 02, 2023,04:11 PM IST

டெஹ்ரான்: ஈரானில் ஒரு கடைக்குள் புகுந்த நபர், 2 பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண்களின் தலையில் தயிரை ஊற்றி அநாகரீகமாக நடந்து  கொண்டார்.


அந்த ஆசாமியைக் கைது செய்த போலீஸார், அந்த இரு பெண்களையும் சேர்த்தே கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தலைமுடியா ஹிஜாப் போட்டு மூடாமல் லூஸ் ஹேருடன் வந்ததால் அந்தப் பெண்களை போலீஸார் கைது செய்தனராம்.


அந்தக் கடைசியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த கலாட்டா பதிவாகியுள்ளது. அந்தக் கடையில் இரண்டு பெண்கள் பொருட்கள் வாங்க நிற்கின்றனர். அப்போது ஒரு நபர் அங்கு வருகிறார். அந்தப் பெண்களுடன் ஏதோ கோபமாக பேசுகிறார். பின்னர் அருகில் இருந்த தயிர் டப்பாவை எடுத்து அதை இரண்டு பெண்களின் தலை மீதும் ஊற்றுகிறார்.


இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். கூடவே அந்த பெண்களையும் கைது செய்தனர். லூஸ் ஹேருடன் வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனராம்.


ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் கடும் தண்டனை கிடைக்கும். இதை எதிர்த்துத்தான் ஈரானில் பெண்கள் மிகப் பெரிய போராட்டங்களை மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்