டெஹ்ரான்: ஈரானில் ஒரு கடைக்குள் புகுந்த நபர், 2 பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண்களின் தலையில் தயிரை ஊற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார்.
அந்த ஆசாமியைக் கைது செய்த போலீஸார், அந்த இரு பெண்களையும் சேர்த்தே கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தலைமுடியா ஹிஜாப் போட்டு மூடாமல் லூஸ் ஹேருடன் வந்ததால் அந்தப் பெண்களை போலீஸார் கைது செய்தனராம்.
அந்தக் கடைசியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த கலாட்டா பதிவாகியுள்ளது. அந்தக் கடையில் இரண்டு பெண்கள் பொருட்கள் வாங்க நிற்கின்றனர். அப்போது ஒரு நபர் அங்கு வருகிறார். அந்தப் பெண்களுடன் ஏதோ கோபமாக பேசுகிறார். பின்னர் அருகில் இருந்த தயிர் டப்பாவை எடுத்து அதை இரண்டு பெண்களின் தலை மீதும் ஊற்றுகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். கூடவே அந்த பெண்களையும் கைது செய்தனர். லூஸ் ஹேருடன் வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனராம்.
ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் கடும் தண்டனை கிடைக்கும். இதை எதிர்த்துத்தான் ஈரானில் பெண்கள் மிகப் பெரிய போராட்டங்களை மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}