டோரன்டோ: தனது 17 வயது மகனுடன் தொலைபேசியில் பேசி விட்டு, குளிக்கப் போனார் அவரது தாய். குளித்து விட்டுத் திரும்பி வந்தபோது, அந்த மகன் சாலை விபத்தில் பரிதாபமாக பலியான செய்தி வந்து குடும்பமே அதிர்ந்து போய் விட்டது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் லாங்லி நகரில் உள்ள பிரேசர் ஹைவேயில் ஒரு பெரும் சாலை விபத்து நடந்தது. அதில் 17 வயதான சீக்கிய இளைஞர் ஒருவர் பலியானார். இவர்தான் அந்தக் காரை ஓட்டி வந்தவர். விபத்து நடந்த சமயத்தில் அங்கு பெரும் மழை கொட்டி வந்தது. வேகமாக வந்த கார், தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
கார் மோதிய வேகத்தில்அந்த தடுப்பு தகர்ந்து போனது, அங்கிருந்த மரமும் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து விட்டது. காரை ஓட்டி வந்தவர் பெயர் டாரேன் லால். இந்த விபத்து குறித்து அவரது தாயார் சரப்ஜித் நனாரா லால் உருக்கமாக கூறிய தகவல்:
சம்பவ தினத்தன்று எனது மகன் எனக்கு போன் செய்தான். அவனிடம் பேசி விட்டு நான் குளிக்கப் போய் விட்டேன். குளித்து முடித்து விட்டுத் திரும்பிவந்தபோது எனது கணவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். எனது மகன் விபத்தில் சிக்கி இறந்த தகவலை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
சம்பவத்தன்று பெரிய மழை பெய்து கொண்டிருந்தது. அதுதான் விபத்துக்கான காரணமாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது மகன் நன்றாகப் படிக்கக் கூடியவன். விளையாட்டில் ஆர்வம் கொண்டவன். துறுதுறுப்பாக இருப்பான். அவன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார் அவர்.
தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!
சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?
பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!
தீபாவளியை முன்னிட்டு திடீர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி!
சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து
சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!
தீபாவளி வரை.. இரவு 1 மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம்.. கோவை போலீஸ் அறிவிப்பு
டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!
ஈழத் தாயக போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றை பனைமரம்.. திரையிடுவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு
{{comments.comment}}