16 வயதான சிறுமி.. மெட்டாவெர்ஸ் மூலம் "கேங் ரேப்".. அதிர வைக்கும் புகார்.. இங்கிலாந்தில் பரபரப்பு!

Jan 04, 2024,08:28 AM IST

லண்டன்:  இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை மெட்டாவெர்ஸ் மூலம் கும்பல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மெட்டாவெர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இப்படி ஒரு புகார் வந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் பரபர்பு ஏற்பட்டுள்ளது.  மெட்டாவெர்ஸ் என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் (virtual reality) ஆகும்.


நாம் கற்பனை செய்யும் உலகில் சஞ்சரிக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. சம்பந்தப்பட்ட சிறுமி, மெட்டாவெர்ஸ் மூலம் ஒரு கேமில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை கும்பல் பலாத்காரம் செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.




அந்த சிறுமிக்கு உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதேசமயம், நிஜமாக ஒரு கும்பல் பலாத்காரத்தின்போது எந்த மாதிரியான தாக்கத்தை உளவியல் ரீதியாக அனுபவிப்பார்களோ அதே தாக்கத்தை இந்த சிறுமியும் அனுபவித்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இது ஒரு மெய்நிகர் பாலியல் குற்றம்.  காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு முதல் மெய்நிகர் virtual reality பாலியல் குற்றமாக கருதப்படுகிறது. தற்போது பாலியல் மெய்நிகர்  குற்றத்திற்கு இதுவரை எந்த சட்டமும் உருவாக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் பாலியல் வன்முறையால் உணர்ச்சி மற்றும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் எந்த மாதிரியான கேம் விளையாடினார் என்ற தகவல் இன்னும் முழுமையாக தெரியவில்லை.


பாலியல் பலாத்காரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மெய்நிகர் பாலியல் குற்றங்களை தொடர வேண்டுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த விசாரணையைத் தொடர வேண்டும் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.


இந்த பின்னணியில், மெட்டா வெர்ஸை உருவாக்கிய பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அது கூறுகையில், இத்தகைய குற்றங்களுக்கு எங்களது அப்ளிகேஷனில் இடம் இல்லை. ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தனிப்பட்ட எல்லை எனப்படும் பாதுகாப்பு உள்ளது. சம்பந்தமில்லாதவர்களை, அது உங்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கும் என்று மெட்டா கூறியுள்ளது.


தொழில்நுட்பத்தால் சந்தோஷங்கள் அதிகம் கிடைத்தாலும்.. இதுபோன்ற சங்கடங்களும் தொற்றிக் கொண்டேதான் வருகின்றன. இந்த வழக்கின் விசாரணையின் போக்கை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

news

சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!

news

தீபாவளி சிறப்பு ரயில்கள்.. சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. அடுத்து பஸ்ஸைப் பிடிக்க வேண்டியதுதான்!

news

தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை.. கடைப் பக்கம் போகவே பயமா இருக்கேப்பா!

news

ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் (சிறுகதை)

news

வங்கக்கடலில் உருவானது.. டாணா புயல்.. நாளை அதி தீவிர புயலாக மாறும்..!

news

மேலடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்