"12 வயசுதான்".. 2 முதியவர்களுக்கு "ஸ்கெட்ச்" போட்டு.. பதை பதைக்க வைத்த காஸியாபாத் Crime!

Dec 31, 2022,08:54 PM IST

காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், முதிய தம்பதியை திட்டமிட்டுக் கொன்று, கொள்ளையடித்த செயல்  அனைவரையும் அதிர வைத்துள்ளது.

12 வயது பையனுக்கு இப்படி ஒரு கிரிமில் புத்தியா என்று பலரும் அதிர்ந்து போயுள்ளனர். காஸியாபாத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உத்தரப் பிரதேசமே விக்கித்துப் போயுள்ளது.


காஸியாபாத்தில் வசித்து வந்தவர் 60 வயதான இப்ராகிம். இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரும்,  இவரது மனைவி ஹஸ்ராவும்  நவம்பர் 22ம் தேதி இவர்களது வீட்டு வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் டாய்லெட்டுக்கு அருகே வீட்டுக்கு வெளியே  இவர்களது உடல்கள் கிடந்தன. கழுத்தில் துணியைச் சுற்றி இறுக்கி இருவரையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு முதலில் சரியான துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தீவிர விசாரணையில் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த துணிகர கொலையில் ஈடுபட்டது வெறும் 12 வயதேயான சிறுவன் என்று தெரியவந்து மலைத்துப் போய்விட்டனர். இந்த சிறுவன், கொலை செய்யப்பட்ட  தம்பதிக்கு ஏற்கனவே தெரிந்த பையன்தான். 

இப்ராகிடமும் நிறைய பணம், நகை இருப்பதை  அறிந்து அந்த சிறுவன் அதை கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளான். இதற்காக தன்னைப் போன்ற சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளான். அது வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர்களைக் கொலை செய்ய அந்த சிறுவன் முடிவு செய்துள்ளான்.  இதுதொடர்பாக மஞ்ஜேஷ், சிவம் , சந்தீப் ஆகியோரை அணுகியுள்ளான். அவர்களும் ஒப்புக் கொள்ளவே, திட்டமிட்டு கொலைசெய்துள்ளனர். கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த பணம், மொபைல் போன், நகை ஆகியவற்றைத் திருடியுள்ளனர்.

தற்போது அந்த சிறுவன், மஞ்ஜேஷ், சிவம் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தீப் இன்னும் சிக்கவில்லை. 


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்