சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 7.25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களின் வசதிக்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், 11ம் வருப்பு மாணவர்ளுக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.
இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,89,736 மாணவர்களும் 4,30, 471 பேர் மாணவியர்களும், இவர்களைத் தவிர தனித்தேர்வர்கள் 5000 பேரும் இத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வுகளுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்கவும் சோதனையில் ஈடுபடவும் 3200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை கண்காணிக்க 46 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பணிக்கு அமர்த்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உரிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய காற்றோட்ட வசதி, வெளிச்சம், மின்விசிறி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
CSK vs LSG.. சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டகாச வெற்றி.. அசத்தலாக ஆடிய தோனி, துபே.. ரசிகர்கள் ஹேப்பி!
மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!
பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!
ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!
மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!
இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
Vallarasu.. வல்லரசு வெளியாகி 25 வருடமாச்சு.. விஜயகாந்தின் அதிரடி ஆட்சி!
பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!
பீம் ஜோதியை ஏன் தடுக்கிறீர்கள்? .. நீங்கள் அம்பேத்கருக்கு எதிரானவரா.. டாக்டர் தமிழிசை கேள்வி!
{{comments.comment}}