டெல்லி: இந்தியா முழுவதும் நாளை 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், 1,132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாளான ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தின விழாவாக கொண்டாடுகிறோம். இந்த குடியரசு தின விழா, இந்தியா முழுவதும் பெருமையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் நாளாகவும் நாம் கொண்டாடுகிறோம்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அப்போது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கலாச்சார நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு முக்கியமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணி வகுப்புகள் நடைபெறும்.
நாட்டின் தலைநகரான டில்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைப்பார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர். இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படும். இதில் காவல் துறையின் நன்மதிப்பு செயல்பாடுகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
75வது குடியரசு தின விழாவின்போது, பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் 1132 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் 24 பேர் ஆவர்.
ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதன் அடிப்படையில் இந்த வருடம் பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அந்நாட்டு ராணுவ குழுவும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}